Friday, February 1, 2013

மூளையற்ற இதயமே..

வார்த்தைகள்..

நடை தளர்ந்த வயோதிகன் போல்,
இடறி விழுந்தன..

காட்சிகள்..
பூட்டிய அறையிலும்,
பார்வை படும் பக்கமெலாம்,
பனி மூட்டமாய்..

நிகழ்வுகள்..
அருகில் நடப்பவை அனைத்துமே,
அருவியில் குளிக்கையில் வரும்,
ஓசையாய் மட்டுமே..

கனக்கும்  கணங்கள்..
 நெஞ்சில் ஏறிய,
இனம் தெரியா கனம் இறங்க,
எடுத்த கணங்கள் எத்தனை?
மூளையற்ற இதயமே..
உனக்கென ஒரு மூளை தனியாக இருந்திருந்தால்..

No comments:

Post a Comment