Monday, February 4, 2013

யாமறிந்த கண்ணகி

கண் விழி கண்ட போதையும்,  
கால் வழி சென்ற பாதையும்,
காட்டிதும் சொர்கம்..

என, மாதவம் இருக்கும்,
மனைவியை மனதில் மாய்த்து..
மாதவி அணைத்தான் என்ற,
கொடி செயல் அறிந்து,

கண் விழி சுடராக்கி,
கால் வழி சென்ற,
செங்குருதி உறைவித்து,
புகுத்தினால் மாணிக்கமாய்.
சிலம்பினுளே..

சிறை புகும் சோகம்,
சிறிதொன்றும் இல்லை,
அவள் கால் உரசி சிணுங்கி,
சிரித்து சேதி சொல்லும்,
யாம் சிலம்பினுள் மாணிக்கம்,
இவள் மங்கையிருள் மாணிக்கம் என்று...

போகும் வழியெலாம் அவல
தடம் பதிக்கும்,
காட்டாற்றையும்  அணைத்து,
சேர்த்திடுமே ஓர் அணை..
தமிழ் வீரம் செறிந்த,
குருதி கட்டுன்தன கண்ணகியின்
சிலம்பொத்த அணையிலே...

எவனவன் ஆயினும்,
கணவனை கயவன்
என்றவனை தீக்கிரையாக்க
துனிந்தனல் தூயவள்...

சிறை பிடித்த சிங்கங்களை,
அணை அடைத்த காட்டாற்றை,
தன் உணர்வுகளின் உருவமாய்,
ஒளிந்து கிடந்த மாணிக்கங்களை..

விட்டெறிந்தால் கோவின் அரசவையிலே,
கோவலனுக்கு  இழைத்த அநீதி கேட்கையிலே...

No comments:

Post a Comment