பொழுதொன்று..
உறக்கத்தின் உதடுகள்,
விழிகளை முத்தமிடுகையில்,
உன் வண்ண முகம்..
என் நினைவு குடுவைகளை,
நிரப்பி கொண்டிருக்கும்..
பொழுதிரண்டு..
நினைவுகளை நிரப்பியவள்..
கனவுகளையே எனக்கு,
கனவாக்கி போன காலம்..
சேர்த்து முப்பொழுது..
கண் மயங்கும் நேரம் சேர்த்து,
கனவுகளையும்,
ஆக்கிரமித்து கொண்டவள்..
சற்றும் தயங்காமல்
கண் விழிக்கும் பொழுதையும்,
திருடி கொண்டவள்...
நிசப்தம் அகன்று..
உறக்கம் உரைத்த,
அவள் எண்ணம் மறைத்து..
அவளை கவி பாடிய,
என் கனவுகள் கலைந்து ,
கண் விழிக்கையில்..
நெஞ்சு குடுவையில்
அவள் ஊற்றிய வண்ணங்கள் கொண்டே,
இன்னும் வரைந்து கொண்டு இருக்கிறாள்..
உன் வரைபடமாகவும்,
உன் படம் வரையும் பலகையாகவும்,
மாறிவிட்ட என் நினைவை
வெள்ளை அடிப்பது எப்படி?
உறக்கத்தின் உதடுகள்,
விழிகளை முத்தமிடுகையில்,
உன் வண்ண முகம்..
என் நினைவு குடுவைகளை,
நிரப்பி கொண்டிருக்கும்..
பொழுதிரண்டு..
நினைவுகளை நிரப்பியவள்..
கனவுகளையே எனக்கு,
கனவாக்கி போன காலம்..
சேர்த்து முப்பொழுது..
கண் மயங்கும் நேரம் சேர்த்து,
கனவுகளையும்,
ஆக்கிரமித்து கொண்டவள்..
சற்றும் தயங்காமல்
கண் விழிக்கும் பொழுதையும்,
திருடி கொண்டவள்...
நிசப்தம் அகன்று..
உறக்கம் உரைத்த,
அவள் எண்ணம் மறைத்து..
அவளை கவி பாடிய,
என் கனவுகள் கலைந்து ,
கண் விழிக்கையில்..
நெஞ்சு குடுவையில்
அவள் ஊற்றிய வண்ணங்கள் கொண்டே,
இன்னும் வரைந்து கொண்டு இருக்கிறாள்..
உன் வரைபடமாகவும்,
உன் படம் வரையும் பலகையாகவும்,
மாறிவிட்ட என் நினைவை
வெள்ளை அடிப்பது எப்படி?
No comments:
Post a Comment