Friday, January 25, 2013

மனமும் மணமும் பேசுகையில்

மனம் இருந்தால்

தவறு செய்தவர் மீது 
சொற்களை தீக்கிரையாக்கி 
உமிழ்ந்து விடாதே...

மனிதன் மேலும்,
மனிதம் மேலும்,
நம்பிக்கை வை!!

மன்னித்து பார்...
மனதில் அமைதி நிலவும்..
மனிதன் மனம் மாறுவான்,
மனிதம் வேறிடம் தேடாமல்
பூமியில் வேரூன்றி தங்கும்!

மணம் இருந்தால்
உயரம்...
மாநிறம்...
சிரிப்பு....
துள்ளல்...
மகிழ்ச்சி....

இவற்றை காண்கையில் 
வரும் உன் நினைவை,
என்னால் புரிந்து 
கொள்ள முடிகிறது!!!

ஆனால் அறிவிப்பின்றி,
நான் செல்லும் இடமெலாம்,
சூழ்ந்து கிடக்கிறதே
உன் மணம்...
அதெப்படி???
இது தான் மணம் மயங்கிய
நிலையோ???

No comments:

Post a Comment