Saturday, December 29, 2012

I hate thinking about you all the time

வீணர்களின் வேதம் இது;
வெறும் பயலின் மோகம் இது;
வேடிக்கை பார்த்து வளரந்த் தாக்கம் இது..
 
கண்டதும் வந்தது 
விபத்தில் வந்தது
விழி பேசிய நொடியில்  வந்தது
என்றவரை
வயதிற்கு வந்ததால் வந்ததென்று
நையாண்டி அடித்த திமிர் எங்கு?


பொழுது புலர்ந்தாலும்;
ஆதவன் ஆர்பறித்தாலும்
அந்தி மறைந்தாலும் 
மானிட பதர் மண்ணில் தூங்கி மடிந்தாலும் 
மண்டையிலும் 
மனதிலும்
மணி அடித்து கொண்டே இருக்கிறது
உன் நினைவு!!

1 comment: