Friday, April 20, 2012

புன்னகை

நீள பறப்பாய் கடல் நீரும்...
அதன் மேனி நெருடும் சில் காற்றும்...

நெருடிய காற்றால் கடல் வெப்பம்,
நீராவி என உருவாகும்!

கொட்டி கிடக்கும் உன் எழிலும்...
அதை வெட்டி பறிக்கும் என் விழியும்..


விழிகளில் புதைந்த உன் வண்ணம்

வெளிவரும் என் உதடோரம்!

No comments:

Post a Comment